செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் மக்கள் போராட்டம் - அமைச்சர்கள் பதவி விலகல்

Jul 10, 2022 02:10:00 PM

இலங்கையில் பொருளாதார நெருக்கடிச் சூழலில் மக்கள் போராட்டத்தையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே வரும் 13ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர்கள் பலரும் பதவி விலகியுள்ளனர். 

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உள்ளது.

மின்சாரம், எரிபொருள் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுத் தலைநகர் கொழும்பில் திரண்ட மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.

அப்போது அங்குப் பாதுகாப்புக்கு நின்ற சிறப்பு அதிரடிப் படையினர் பொதுமக்களைத் தாக்கியதுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் மதிற்சுவரில் துப்பாக்கியால் சுட்டனர்.

 

பெருமளவில் மக்கள் வந்ததால் பாதுகாப்புப் படையினர் செய்வதறியாது ஒதுங்கினர். அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே ஒரு காரில் தப்பிச் சென்றதாகவும், குடும்பத்தினருடன் ஆம்புலன்சில் மறைந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக ஒரு கருத்தும், ராணுவத் தலைமையகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக மற்றொரு கருத்தும் நிலவுகிறது.

 

அதிபர் மாளிகைக்குள் புகுந்த மக்கள் அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றனர். இளைஞர்கள் பலர் அங்கிருந்த நீச்சல் குளத்தில் துள்ளிக் குளித்து விளையாடினர்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் அவர் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.

 

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே இருநாட்களில் பந்துல குணவர்த்தன, மனுச நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகிய மூன்று அமைச்சர்கள் நேற்றுப் பதவி விலகினர்.

வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா ஆகியோர் இன்று பதவி விலகியுள்ளனர்.

 

இலங்கை அதிபர் மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றிப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாகப் பணத்தை எண்ணும் காட்சியும் வெளியாகியுள்ளது.

 

இலங்கையில் மின்வெட்டு நிலவும் நேரத்தில் அதிபர் மாளிகையில் மின்கருவிகள், குளிரூட்டிகள் அனைத்தும் இயங்கியதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இலங்கைக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் இன்று வருவதாகவும், எரிவாயு ஏற்றிய மற்றொரு கப்பல் நாளை வரவுள்ளதாகவும், இதையடுத்துச் சமையல் எரிவாயு வழங்கல் தொடங்கும் என்றும் அரசு செயலகம் தெரிவித்துள்ளது.


Advertisement
சீன மின்சார கார்களுக்கு 37.6 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை... ஒரே நாளில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் பலி
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா
இந்தியாவில் முதலீடு - அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...


Advertisement