செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி.. நெருக்கடிக்கு காரணம் என்ன?

Jul 10, 2022 07:52:53 AM

கொரோனாவால் சுற்றுலாத்துறை வீழ்ச்சி, நிர்வாக சீர்கேடு, அதிக கடன் உள்ளிட்டவை இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 

கடந்த 2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினார். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைத் தொடங்கியது.

இதனை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளால், பொருளாதார நிலை மேலும் மோசமானதாக சொல்லப்படுகிறது. டீ, ஏலக்காய், ரப்பர் போன்ற பொருட்களின் உற்பத்தியை இலங்கை அதிகளவில் நம்பியிருந்த நிலையில், ஏற்றுமதி சரிந்ததால் அந்நாட்டின் வருவாய் பெரிதும் குறைந்தது. அதன் பிறகு இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் நாணயமும் பெரிய அளவில் மதிப்பிழந்தது.

இதனை சமாளிக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீன வங்கிகளிடம் இலங்கை அதிகளவில் கடனை பெற்றது. பெரும்பாலும் வருவாய் வராத திட்டங்களுக்கு இலங்கை அரசு தொடர்ந்து வாங்கிய கடனால், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து, கடனுக்கான வட்டியை செலுத்த மீண்டும் கடன் பெறும் நிலையை அந்நாடு எதிர்கொள்ள நேர்ந்தது.

முன்னதாக, 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிப்பெற்ற நிலையில், அவரது சகோதரர் மகிந்தாவை பிரதமராக அவர் நியமித்தார். நாட்டின் நிதிப் பற்றாக்குறைகளைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வரிவிதிப்புகளில் மாற்றங்களை கோத்தபய அறிவித்த நிலையில், பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்ததால்தான், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரசாயன உரங்கள், யூரியா இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்தது. மேலும், விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்காச்சோளா, தேயிலை, நெல் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் பெருமளவு குறைந்து, உணவுத் தேவைக்காக பிறநாடுகளை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டது.


Advertisement
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement