செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இந்தியா- இலங்கை உறவு வலுப்பெறும் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டம்

May 13, 2022 06:22:09 AM

இலங்கையில் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்த 9ந் தேதி உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை அந்நாட்டின் பிரதமராக அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என்றும், இதில் 15 பேர் இடம்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
6-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதே தமது முதன்மையான இலக்கு என்று குறிப்பிட்டார். இந்தியா இலங்கை இடையிலான உறவு மேம்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. ரணில் தலைமையிலான அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டு, அதன்பின்னர் நாளை காலை 6 மணி வரை மீண்டும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement