செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இலங்கையில் அமைதி திரும்புமா? புதிய பிரதமரை நியமிக்க கோத்தபய மும்முரம்!

May 12, 2022 09:20:22 AM

இலங்கையில் வரும் வாரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அதிபரை ரணில் சந்தித்துப் பேசியிருப்பதால் அவர் பிரதமராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். வரும் வாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கை பெற்ற புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக கூறினார். நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்க இடமளிக்கும் வகையிலான 19வது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் அரசியல் சீரமைப்புகள் குறித்து பின்னர் ஆராயப்படும் எனவும் கோத்தபயா குறிப்பிட்டார்.

இரண்டே நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 பேர் படுகொலை மற்றும் 300 பேர் படுகாயம் அடைந்ததை வன்மையாக கண்டிப்பதாக கோத்தபயா குறிப்பிட்டார்.

வன்முறை சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய கோத்தபயா, போராட்டம், மற்றும் வன்முறையை தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் மற்றும் ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறினார்.

இதனிடையே, அதிபர் கோத்தபயவை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரும்பான்மை பெற்றுள்ள புதிய அரசு ஓரிரு நாட்களில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சுதந்திரா கட்சி உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை அதிபர் கோத்தபயாவிடம் பரிந்துரைத்ததாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்றதும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்.பி.க்கள் எதிர்கட்சி வரிசையில் அமரும் என கூறப்படுகிறது. இதனால் சஜித் பிரேமதாசவின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Advertisement
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement