செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... வெளிநாடு தப்பியோடும் மகிந்த ராஜபக்சே?

May 10, 2022 04:25:31 PM

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே கொழும்புவில் இருந்து தப்பி குடும்பத்தினருடன் திரிகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் வன்முறை உருவானது.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் மகிந்த ராஜபக்சேவின் வீடு, எம்.பி.க்கள், மேயர்கள் உள்ளிட்டோரின் வீடுகளை தீக்கிரையாக்கினர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோரின் வீடுகள், உடமைகள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்புவில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரிகோணமலை கடற்படை முகாமிற்கு ஹெலிகாப்டர் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் தப்பியோடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

திரிகோணமலை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தஞ்சமடைந்திருப்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் மகள் யசோதா ஏற்கனவே ஆஸ்திரேலியா தப்பிச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சே திரிகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருக்கும் தகவல் தெரிந்து அங்கு கூடிய மக்கள் முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதோடு, கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதரமான சூழ்நிலையை சமாளிக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த நாளைய தினம் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழர்கள் வசிக்கும் யாழ்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே இலங்கையில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படலாம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு
ஈரான் அறிவிப்பால் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்: ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்க வரும் 'மில்டன்' சூறாவளி
அல்பேனிய பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கொலம்பியா நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை ஆமை
தனது மனைவிக்காக பிரத்யேக கார் வாங்கிய பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் சூக்கர்பெர்க்
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு வீடியோகளை வெளியிட்ட இஸ்ரேல் அரசு
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை - இஸ்ரேல்

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement