செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் அரசுக்கு எதிராக மெகா போராட்டம்.. ஊரடங்கு நாளை வரை நீட்டிப்பு..!

May 10, 2022 06:34:18 AM

இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இலங்கை முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கும் இடையே நேற்று கலவரம் மூண்டது.

போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு மகிந்தாவின் ஆதரவாளர்கள் தீ வைத்த நிலையில், பொதுமக்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சிறைக் கைதிகளையும் அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள், ஆளுங் கட்சி எம்.பி.க்கள், மேயர், அரசியல் பிரமூகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், சொகுசு கார்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான குருநாகலில் உள்ள அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகையான அலரி இல்லத்தில் ஆயிரக்கணக்கானோர் நுழைய முயற்சித்ததால் பெரும் பதற்றம் நிலவியது...பாதுகாப்புப் பணியில் ஈடபட்டிருந்தவர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிரட்டினர்..

இரவிலும் போராட்டம் நீடித்த நிலையில், முன்னாள் அமைச்சர் Rohitha வீட்டை அடித்து நொறுக்கி மக்கள் தீவைத்தனர்.

கொழும்பிவில் உள்ள அரசியல் தலைவரின் ஹோட்டலை அடித்து நொறுக்கிய அங்கிருந்த சிலிண்டர் உள்ளிட்டவற்றை தூக்கிச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர் குமார் வெல்கமா சென்ற காரை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்கும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தப்பிக்க விநோத முயற்சிகளை மாணவர்கள் கையாண்டனர்.

பெருங்கலவரத்தை அடுத்து தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க கொழும்பு ரத்மலான விமான நிலையத்தை மக்கள் சுற்றி வளைத்தனர்.


Advertisement
சீன மின்சார கார்களுக்கு 37.6 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை... ஒரே நாளில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் பலி
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா
இந்தியாவில் முதலீடு - அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்


Advertisement