பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்தடுத்து இரு மின்சார பேருந்துகள் தீ பிடித்து எரிந்ததை அடுத்து பொது புழக்கத்தில் உள்ள அனைத்து மின்சார பேருந்துகளையும் திரும்பப் பெற்றதாக அரசு அறிவித்தது.
மத்திய பாரீசில் உள்ள தேசிய நூலகம் மற்றும் கலாசார அமைச்சகத்தின் அருகே சென்ற மின்சார பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்து சாம்பலானது.
2-வது சம்பவமாக மின்சார பேருந்து தீபற்றியதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி புழக்கத்தில் உள்ள 149 மின்சார பேருந்துகளை திரும்பப் பெற்றதாக அரசு அறிவித்தது.