செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பாக். நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் வாக்கெடுப்பு - கவிழ்ந்தது இம்ரான் கான் அரசு

Apr 10, 2022 07:02:48 AM

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.  இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இம்ரான்கான் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததால், வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார். இந்த நடவடிக்கை செல்லாது என்றும், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று பகலில் நடைபெறுவதாக இருந்த பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நள்ளிரவில் நடைபெற்றது. அவைக்கு இம்ரான்கான் வந்ததும், சபாநாயகரும், துணை சபாநாயகரும் பதவி விலகுவதாக அறிவித்தனர். பின்னர் ஆளும் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினர்.

இடைக்கால சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. 342 பேர் கொண்ட அவையில் 174 பேர் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் பேசிய நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம்லீக் கட்சித் தலைவர் ஷபாஜ் ஷெரீப், தமது கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றபின் யார்மீதும் பழிவாங்கும் நடவடிக்கையோ, கைது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது என்றார்.

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷபாஜ் ஷெரீப் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே அந்நாட்டு அதிகாரிகள் யாரும் வெளிநாடு செல்லக்கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement