செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் தொடரும் போராட்டம்.. உணவு தட்டுப்பாடு வரும் அபாயம்

Apr 08, 2022 07:55:56 PM

இலங்கையில் போராட்டங்களுக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறி முன்னாள் அமைச்சர்கள் ஓட்டல்களில் தஞ்சமடைவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சை அளிக்க போதுமான மருந்து இல்லை என மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், வரும் மே மாதத்தில் இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என அந்நாட்டின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரம ரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை என தேசிய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருந்து விநியோகம் சீரடையாவிட்டால், அதிக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, விலை வாசி உயர்வு உள்ளிட்டவற்றிற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளையும், அலுவலகங்களையும் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டல்களில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அரசு நிதி நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்றும் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய சஜித் பிரேமதாச, இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.

மன்னார் பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்க பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுகணக்கானோர் வரிசையில் காத்திருந்தனர். அதேபோல், டீசல்களை நிரப்ப எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

வரலாற்றில் முதல் முறையாக டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளன. 


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement