செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பெரும்பான்மையை இழந்தது இலங்கை அரசு... முற்றுகிறது அரசியல் நெருக்கடி..!

Apr 05, 2022 04:13:48 PM

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறுவதால் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு உள்ளிட்ட பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஆளுங்கட்சி அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்க முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவெகய உள்ளிட்ட கட்சிகள் மறுத்தன. நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் காலை 10 மணியளவில் கூடியது. இதனைத் தொடந்து, நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அவர் அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இன்று விலகியுள்ளார்.

இலங்கை சுதந்திர கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது, ஆளும் கட்சி எம்.பிக்கள் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளது ஆகியவற்றால் அரசு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை இழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆளும் இலங்கை பொதுஜன பெருமுன கட்சி, ஆட்சியை தொடரும் வகையில் 113 இடங்களை தக்கவைக்க முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என்றும், 113 இடங்களில் பெரும்பான்மை இருப்பதை எந்தக் கட்சி நிரூபிக்கிறதோ அந்த கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயார் என்றும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை முழுமையாக விலக்கி கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அமைச்சரவையில் ஜீவன் தொண்டைமான் இணை அமைச்சராக இருந்து வந்த நிலையில், இன்று காலை அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதேபோல், நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் முன் துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவும் ராஜினாமா செய்துள்ளார்.


Advertisement
அக்டோபர் 1-ல் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.. 4 அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது இஸ்ரேல்
மத்திய ஆப்ரிக்க காங்கோ நாட்டில் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 78 பேர் உயிரிழப்பு
ஈரான் அணுசக்தி நிலையங்களை முதலில் தாக்குங்கள்... டிரம்ப் இஸ்ரேலுக்கு அறிவுரை
ஹெஸ்புல்லா, இஸ்ரேல் இடையே தீவிரமடையும் மோதல்... லெபனானை விட்டு வெளியேறத் தொடங்கிய வெளிநாட்டினர்
ஏமனை நோக்கி அமெரிக்க, இங்கிலாந்து படைகள் தாக்குதல்.. ஹமாஸ், ஹெஸ்புல்லாவை அடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு குறி..!
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
கொரிய தீபகற்ப பாதுகாப்புக்கும், அமைதிக்கும் எதிராகச் செயல்படுவது தென்கொரியாதான் - கிம் ஜோங் உன்
ரஷ்யாவின் கம்சட்ஸ்கி தீபகற்பத்தில், கழிமுகத்தில் சிக்கிக்கொண்ட 4 ஓர்கா இன திமிங்கலங்கள்
இந்தியா, அமெரிக்கா இடையே கனிம வளங்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் அதிபர்

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement