செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கப்பல் மோதியதால் 50 பயணிகளுடன் படகு உடைந்து மூழ்கிய காட்சி..!

Mar 24, 2022 07:56:59 AM

பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றின் மீது பிரமாண்ட சரக்கு கப்பல் பயங்கரமாக மோதி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவத்தில்  உடைந்து நொறுங்கிய படகு கடலில் மூழ்கியதில் 6 பேர் பலியாகினர். இந்த பதை பதைக்க வைக்கும் சம்பவத்தின் வீடியோ  காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹாலிவுட் படங்களில் வருவதை போல பிரமாண்ட கப்பல் ஒன்று , பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இடித்து தள்ளிக்கொண்டு செல்லும் இந்த சம்பவம் பங்களதேஷ்ஷின் டாக்கா அருகே நடந்துள்ளது. பங்களதேஷின் டாக்க தொடங்கி முக்கிய நகரங்களை இணைப்பது அங்குள்ள நதிகள் தான். அங்கு நீர்வழி போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது.

அங்கு கடல் போல காட்சி அளிக்கும் சிட்டலக் ஷியா நதியில் கடந்த 20 ந்தேதி மதியம் 2 மணி அளவில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று பயணித்தது. அப்போது அந்த வழியாக சென்ற பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அந்த பயணிகள் படகின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த படகு படகில் முன்பக்கத்தில் சிக்கிக் கொண்டது . அந்த படகு இழுத்து செல்லப்பட்டதால் படகில் இருந்த பயணிகள் உயிர் பிழைக்க கூச்சலிட்டனர்

படகில் இருந்த சிலர் நிலைமையின் விபரீதம் உணர்ந்து உயிர் பிழைப்பதற்காக ஆற்றில் குதித்தனர்

கப்பலின் மாலுமி சுதாரித்துக் கொண்டு கப்பலை நிறுத்துவதற்கு முன்பாக கப்பலில் சிக்கிய அந்த படகு உடைந்து நொறுங்கி ஆற்றில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் 6 பேர் வரை பலியான நிலையில் மற்றவர்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்த கப்பலின் அருகில் மற்ற படகுகளில் பயணித்தவர்கள் எடுத்த பதை பதைக்க வைக்கும் மற்ற வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது

கப்பல் மாலுமியின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் , நீர்வழி போக்குவரத்து துறையில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடே இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


Advertisement
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement