செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ரஷ்யாவும், நேட்டோ படைகளும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால், அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் - ஜோ பைடன்

Mar 12, 2022 06:23:34 AM

ரஷ்யாவும், நேட்டோ படைகளும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால், அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 17-வது நாளை எட்டிய நிலையில், தலைநகர் கீவ் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. மரியுபோல், வினிட்ஷா உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உள்பட 600-க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ராணுவ நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், உக்ரைனில் ரஷ்ய படைகள் ரசாயான ஆயுதங்களை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் போர் குற்றங்களுக்கு அதிபர் புதின் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

உக்ரைனில், ரஷ்யாவுடன் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் நேருக்கு நேர் சண்டையிடாது என்று தெரிவித்த அதிபர் பைடன், ஒருவேளை நேட்டோ படைகளும், ரஷ்யாவும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானால் அது மூன்றாவது உலகப் போரை தூண்டிவிடும் என்றார்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஐரோப்பிய நட்பு நாடுகளின் எல்லையின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் என்றார். உக்ரைனுக்கு கூடுதல் விமானம் மற்றும் டாங்கிகள் தடுப்பு ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கி உள்ளதாக பைடன் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஜி 7 மற்றும் ஐரோப்பியாவின் நட்பு நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தப் போவதாகவும் ரஷ்யாவில் இருந்து வோட்கா, கடல் உணவு, வைரம் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக பைடன் தெரிவித்தார்.

 

 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement