செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா 16ஆம் நாளாகத் தாக்குதல்..!

Mar 11, 2022 03:16:03 PM

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து பதினாறாம் நாளாக இன்றும் பல்வேறு நகரங்களின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பிப்ரவரி 24ஆம் நாள் முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அணுமின் நிலையங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றையும், எல்லைப் பகுதி நகரங்களையும் ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் கீவைக் கைப்பற்றும் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் பதினாறாம் நாளாக இன்றும் லுட்ஸ்க், தினிப்ரோ, ரைவ்ன், வாலின் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய ராணுவத்தினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

லுட்ஸ்க் நகரில் உள்ள மோட்டார் வாகனத் தொழிற்சாலை மீது இன்று ரஷ்யப் போர் விமானங்கள் குண்டுவீசியதில் அது வெடித்து அந்தப் பகுதியில் கரும்புகையுடன் தீப்பிழம்பு எழுந்தது. 

தினிப்ரோ நகரில் ரஷ்ய விமானப்படை குண்டு வீசித் தாக்கின. குண்டுகள் வெடித்து அப்பகுதியில் தீப்பிழம்பு வானில் எழுந்த காட்சி வெளியாகியுள்ளது.

இவானோ பிராங்கிவ்ஸ்க் நகரிலும் பல இடங்களில் குண்டுவெடித்ததால் வானில் புகைமூட்டம் சூழ்ந்த காட்சி வெளியாகியுள்ளது. 

செர்னோபில் அணுமின் நிலையத்தின் பணியாளர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்குக் கடற்கரைத் துறைமுக நகரான மரியுபோலில் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை குண்டு வெடிப்பதாக மேயர் பாய்செங்கோ தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதாகவும், குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement