ரஷ்யாவில் தங்கள் வணிகத்தை நிறுத்தி விட்டதாக கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனில் நடந்த சோகமான நிகழ்வுகளால் மக்களுடன் தங்கள் இதயமும் இணைந்திருப்பதாக கோகோ கோலா நிறுவனம் கூறியுள்ளது.
இதேபோல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவில் செயல்பட்டு வரும் பெப்சி, தங்களின் வணிகத்திற்கு மனிதாபிமானம் முக்கியமாக இருக்க வேண்டும் என்று தனது விற்பனையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளில் உள்ள உக்ரேனிய அகதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவோம் என பெப்சி நிறுவனம் கூறியுள்ளது.