ஐரோப்பிய நாடுகள் இல்லாமல் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர்,பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் நம்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே ஐரோப்பாவுடன் இணைந்து தடை விதித்தால் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்பதால் அமெரிக்கா மட்டும் தடை செய்தால் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து பைடன் நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டார்.