செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொலை முயற்சிகளில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர்..!

Mar 05, 2022 07:32:23 PM

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியைக் கொல்வதற்காக ரஷ்யா இரண்டு குழுக்களை அனுப்பி வைத்ததாகவும், அந்தக் கொலை முயற்சிகளை முறியடித்ததாகவும் உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24ஆம் நாள் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. கீவ் நகரின் மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியபோது, நாட்டை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற்றுவதாக அமெரிக்கா கூறியபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ரஷ்யாவில்ல கொலைக் குழுவின் தாக்குதல் முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளதாகக் கூறப்படுகிறது.அதனால் செலன்ஸ்கி பதுங்கு குழிகளில் இருந்துகொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. .

 ரஷ்ய உளவுத்துறையில் உள்ள போருக்கு எதிரான குழுவினர் தகவல் அளித்தது செலன்ஸ்கி மீதான தாக்குதல் முயற்சிகளை முறியடிக்க உதவியாக இருந்ததாக உக்ரைன் தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலர் அலெக்சி டேனிலோவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 நாட்டின் தலைமையை அழிப்பதன்மூலம் அரசியல் முறையில் உக்ரைனை அழிக்க ரஷ்யா முயல்வதாகவும், அவர்களின் முதல் குறி தான்தான் என்றும் செலன்ஸ்கி கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

உக்ரைனியர்களைக் கொல்வது அல்லது சிறைபிடிப்பதற்கான பட்டியலை ரஷ்யப் படையினர் தயாரித்துள்ளதாகக் கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

உக்ரைன் அதிபரைக் கொல்லும் திட்டத்துக்குப் புடினின் நண்பர் நடத்தி வரும் வாக்னர் குழுமத்தைச் சேர்ந்த ஒரு குழுவும், செச்சன்யாவில் ரஷ்யாவுக்குப் போர் புரிந்த ஒரு குழுவும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செச்சன் குழுவினரின் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டு அவர்கள் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டதாக டேனிலோவ் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டோரில் ரஷ்யாவின் செச்சன்ய தளபதி மகமது துசாயேவும் ஒருவர் என்றும் டேனிலோவ் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement