செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Mar 03, 2022 06:21:52 AM

உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநா.பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகநாடுகள் தங்கள் பக்கம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் குறித்து விவாதிக்க ஐநா.பொதுச்சபையின் பதினோராவது அவசரக் கூட்டம் நியுயார்க் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபின்சியா, மக்களை கேடயமாகப் பயன்படுத்தி உக்ரைன் போர் புரிவதாக குற்றம் சாட்டினார். இந்த போர் அமைதியான முறையில் முடிவடையாமல் பேச்சுவார்த்தையை இழுபறியாக்குவதாகவும் உக்ரைன் மீது அவர் குற்றம் சாட்டினார். மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் கிரிமீயா பற்றி பேச்சு நடத்த முடியாது என்றும் ரஷ்ய பிரதிநிதி தெரிவித்தார்

இந்தக் கூட்டத்தில் ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. சபையில் நடந்த வாக்கெடுப்பில், 141 வாக்குகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் 5 வாக்குகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் பதிவாகின. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

ஒரே வாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் மூன்று முறை ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போதும், இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.பொதுச்சபையில் பெரும்பாலான ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். இந்தத் தீர்மானத்தால் உலக அரங்கில் ரஷ்யாவுக்கு நெருக்குதல் அதிகரிக்கும்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தமது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி ,ரஷ்யா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement