செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்.. ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்..!

Mar 02, 2022 02:00:25 PM

உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்யப் படையினரின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து பிற நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதற்காக ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

கிழக்கு உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசித் தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகியுள்ளது.

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சான் நகரை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள சாலைகளில் ராணுவ வாகனங்களில் ரோந்து சென்றனர்.

சுகுயேவ் விமானப்படைத்தளத்தில் இரவில் தாக்குதல் நடத்தப்பட்டபோது குண்டுவெடித்துத் தீப்பற்றி எரிந்த காட்சி வெளியாகியுள்ளது

உக்ரைனின் பல நகரங்களில் இரவிலும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றிப் பொதுமக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் இரவுபகலாக ஈடுபட்டுள்ளனர்.

கார்க்கிவில் ரஷ்யப் படையினரின் தாக்குதலில் அடுக்குமாடிக் கட்டடங்கள் சேதமடைந்ததுடன், வாகனங்களும் எரிந்து கூடாக நிற்கின்றன.

மூன்று புறங்களில் இருந்தும் உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவத்தினர் ஊடுருவியுள்ள நிலையில், அணி அணியாகப் பீரங்கிகள், போர்த்தளவாடங்களை ரயில் ரேக்குகளில் ஏற்றிக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யப் படையினர் ஏழாம் நாளாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிற நாடுகளில் அடைக்கலம் தேடிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

கார்க்கிவ் நகரில் உள்ள நூற்றாண்டுப் பழைமையான மாலிசேவ் பீரங்கித் தொழிற்சாலை ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் தீப்பற்றி எரியும் காட்சி வெளியாகியுள்ளது.

 

உக்ரைனில் காவல்துறைக் கட்டடத்தின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் அந்தக் கட்டடத்தின் உச்சியில் தீப்பற்றி எரிந்தது. எரிந்த பகுதிகள் பெயர்ந்து கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைனில் ரஷ்யப் படையினர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் நகரங்களைவிட்டுப் பொதுமக்கள் சாரைசாரையாக வெளியேறிச் செல்கின்றனர்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement