செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ராணுவத்திற்கு புதின் புதிய உத்தரவு.. பேச்சுவார்த்தைக்கு முன்வந்த உக்ரைன்..!

Feb 27, 2022 10:15:34 PM

அணு ஆயுத தடுப்பு படைகளை அதிக உஷார் நிலையில் வைக்க ரஷ்ய ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு முன்வந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 4 நாட்களை எட்டியுள்ள நிலையில், பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடத்த குழு அனுப்ப தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைனை தாக்க பெலாரஸ் நாட்டை ரஷ்யா பயன்படுத்துவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், அதற்கு பதில் வேறொரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பங்கேற்க தயார் என்றும் அதிபர் செலன்ஸ்கி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பெலாரஸ் எல்லையில் இரு தரப்பினரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என உக்ரைன் அதிபர் அலுவலகம் தரப்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ ஆக்ரோஷ்மாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட அதிபர் புதின், அணு ஆயுத தடுப்பு படைகளை அதிக உஷார் நிலையில் வைக்க தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இந்த சூழலில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக உக்ரைன் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பேச்சுவார்த்தை தொடர்பாக பெலாரஸ் நாட்டின் அதிபர் லுகாஷென்கோவுடன், உக்ரைன் அதிபர் செல்ன்ஸ்கி அவசரமாக கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பினை உக்ரைன் அரசு வீணடித்து வருவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement