செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரஷ்யா - உக்ரைன் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் : அமெரிக்கா எச்சரிக்கை

Feb 18, 2022 10:06:05 PM

க்ரைன் எல்லைகளில் இருந்து ரஷ்யா படைகளை திரும்பப் பெற்று வருவதாக கூறி வரும் நிலையில், உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். 

சோவியத் யூனியன் உடைந்த போது தனிநாடாக உருவெடுத்த உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருவதால், பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, இருநாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்தது. இதற்கிடையே, ராணுவ கூட்டமைப்பான நேட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதையும் விரும்பாத ரஷ்யா, அந்நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்தது.

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அதிநவீன பீரங்கிகள், போர் வாகனங்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிலைநிறுத்தியிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே கடுமையான போர்பதற்றம் உருவானது. இந்த போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.

பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை என பலதரப்பு செயல்பாடுகளுக்கு பின்னர் உக்ரைன் எல்லையில் இருக்கும் தமது நாட்டு படைகள் திரும்பப் பெறப்படுவதாக ரஷ்யா கூறியது.

இந்த நிலையில் தான், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லையோர மாகாணமான டான்பஸில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் திடீரென தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது நடைபெற்ற இந்த தாக்குதலில் மழலையர் பள்ளியில் பணியாற்றி வந்த 3 பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இது குறித்து கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் எல்லையில் இருந்து படைகள் எதையும் திரும்பப் பெறவில்லை, அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், ரஷ்யா படைகளை திரும்ப பெறுவதாக கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை, அதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது எனவும் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். மேலும் ரஷ்ய படையெடுப்பு பற்றிய அச்சம் அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிபர் புதினை நேரில் அழைத்து பேசும் திட்டம் தனக்கு இல்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement