ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30 சதவீத கோலா கரடிகள் அழிந்துள்ளதாக Australian Koala Foundation அமைப்பு தெரிவித்துள்ளது. வறட்சி, காட்டுத்தீ மற்றும் வளர்ச்சி காரணங்களுக்காக மனிதர்களால் அதிகரித்துள்ள காடழிப்பு நடவடிக்கைகளால் 2018-ல் 80 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கோலா கரடிகளின் எண்ணிக்கை, இப்போது 58 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019, 2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அதிகபட்சமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோலா கரடிகளின் எண்ணிக்கை 41 சதவீதம் குறைந்துள்ள நிலையில், கோலா கரடிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.