செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல்- ஜோ பைடனின் அபாய எச்சரிக்கை

Aug 29, 2021 05:09:38 PM

 

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தற்கொலை தாக்குதல் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய கடந்த 15 ஆம் தேதி முதல் இதுவரை அமெரிக்கா தலைமையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமானங்கள் வாயிலாக மீட்கப்பட்டுள்ளனர்.ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக விலகுவதற்கான கெடு வரும் 31 ஆம் தேதி முடிய உள்ளது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் ஆப்கானியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும், அமெரிக்க படைகளை சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர். இதேபோல, காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் ஒரு தற்கொலை தாக்குதலில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் ஈடுபடலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

காபூலில் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க தூதரகத்தின் சார்பில் அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் கடைசியாக காபூலில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் மீண்டும் ஒரு தற்கொலை தாக்குலை நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை அதிபர் பைடனிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஐஎஸ் தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆப்கானியர்களை பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல தாலிபன்கள் உதவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதநேய பணிகளை மேற்கொள்ள காபூலில் ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருமாறு பிரிட்டனும், பிரான்சும் ஐ.நா விடம் கோரிக்கை வைத்துள்ளன. 


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement