நியூசிலாந்தில் டெல்டா வகை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 15 மாதங்களுக்கு பின் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முக்கிய பகுதிகளில் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு காரணமாக பொது மக்கள் நடமாட்டம் குறைந்ததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.