செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஆப்கானில் ஆட்சி மாற்றம்..! தாலிபான்களிடம் காபூல்.. அதிபர் பதவி விலகல்..!

Aug 16, 2021 10:37:43 AM

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதிபர் பதவியில் இருந்து அஷ்ரப் கனி விலகினார். தாலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி அகமது ஜலாலி தலைமையேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த தாலிபான்கள் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து ஹிராத், காந்தகார், மசார் இ சரீப் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினர். இன்று காலை ஜலாலாபாத் நகரையும் கைப்பற்றி அங்கு வெள்ளைக் கொடிகளை ஏற்றினர். தாலிபான்கள் நகருக்குள் நுழைந்ததுமே அரசுப் படையினர் சண்டையின்றிச் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

காபூல் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்துக் காபூலை முற்றுகையிட்டனர். போரின்றி ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், அது குறித்துப் பேச்சு நடத்த விரும்புவதாகவும் கூறி அதிபர் மாளிகைக்குச் சென்ற தாலிபான்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நாற்புறமிருந்தும் தாலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்ததும் அரசுப் படையினர் அவர்களிடம் சரணடைந்தனர். ஆட்சி மாற்றம் குறித்து அதிபர் மாளிகையில் தாலிபான் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். இதையடுத்துத் தாலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகினார். அவர் நாட்டை விட்டுவெளியேற உள்ளதாகவும், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் புதிதாக அமையும் இடைக்கால அரசுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி அகமது ஜலாலி தலைமையேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காபூலின் புறநகரில் அமெரிக்காவின் விமானப் படைத்தளமாக இருந்த பாக்ராமுக்குத் தாலிபான் படையினர் சென்றதும், அவர்களிடம் அரசுப் படையினர் சரணடைந்தனர். பாக்ராம் சிறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த தாலிபான்கள், அங்கிருந்த கைதிகள் அனைவரையும் விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூலில் உள்ள தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைத்துக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டன் அரசுகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.




Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement