பாலஸ்தீனத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சுகாதார வசதியின்றி தவிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஏற்பட்ட சண்டையில் 200க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாலஸ்தீனில் உள்ள வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து பாலஸ்தீன பகுதிகளுக்கு ஐநா சபை, செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் சென்று வந்தனர்.
தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிடம் வழங்கிய அறிக்கையில், பாலஸ்தீனில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.