தாய்லாந்தில் சாலை விபத்தில் இதயதுடிப்பு நின்ற யானை குட்டி ஒன்று, சிபிஆர் சிகிச்சை எனப்படும் இதயத்தை இயங்க செய்வதற்கான செயற்கை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளது.
சாந்தாபூரி எனும் பகுதியில் சாலையை கடக்க முயன்ற யானை குட்டி மீது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை குட்டி உயிரில்லாத சடலம் போல சாலையில் கிடந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த வன மருத்துவர்கள், மனிதர்களுக்கு அளிக்கப்படுவது போல யானை குட்டியின் இதயம் இருக்கும் பகுதியை 2 கைகளால் அழுத்தவே 10 நிமிடங்களில் இதயதுடிப்பு வந்து எழுந்தது.