"ட்விட்டர் கில்லர்" என்ற பெயரில் ஜப்பானை உலுக்கிய சீரியல் கொலைகாரனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை எண்ணம் பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து, தானும் அவர்களுடன் சேர்ந்து மடியத் தயார் என பேசி நட்பாக்கி கொள்வது 30 வயது இளைஞனான தகாஹிரோ ஷிரைசியின் வழக்கம்.
இப்படி 15 முதல் 26 வயதுடைய 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை நட்பாக்கி கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி டிஸ்போஸ் செய்து வந்துள்ளான்.
தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியவர்களையே கொலை செய்ததால் தகாஹிரோவுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என அவனது வழக்கறிஞர் வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி, தகாஹிரோவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.