ஜெர்மனியின் பெர்லினில் உள்ள Tegel விமானநிலையம் மூடப்பட்டது.
1960ஆம் ஆண்டு வணிக நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இந்த விமானநிலையத்தில் இருந்து, கடைசி சேவையாக பாரிசுக்குப் புறப்பட்டுச் சென்ற விமானத்திற்கு விமானநிலைய ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை அளித்தனர்.
கொரோனா காரணமாக இந்த விமானநிலைய நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இங்கு பல ஆயிரம் ஏக்கரில் நவீன வசதிகளுடன் கூடிய தொழிற் பூங்கா மற்றும் குடியிருப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் வர உள்ளதை அடுத்து இந்த விமானநிலையம் மூடப்படுகிறது.