செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிமுகம்... நீதிமன்றத்தை நாடும் டிரம்ப் தரப்பு

Nov 05, 2020 08:33:57 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களிலும் வென்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, அதிபர் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஜோ பைடன் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நியூ மெக்சிகோ, நியூயார்க், மாசாசூசெட்ஸ், கொலராடோ போன்ற பகுதிகளில் ஜோ பைடன் வென்றிருந்த நிலையில், கடும் போட்டியுடன் இழுபறி நீடித்து வந்த மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றிபெற்று 264 இடங்களை அவர் கைப்பற்றியுள்ளார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் வடக்கு கரோலினா, நேவடா, அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களிலும் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.

26 தேர்வாளர்களைக் கொண்ட மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாநிலங்களில் பைடன் பெற்றுள்ள வெற்றி, அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுவரை 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள ட்ரம்ப், 20 தேர்வாளர்களைக் கொண்ட பென்சில்வேனியாவில் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதனிடையே, மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலத்தில் பல பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை என, ட்ரம்பின் பிரச்சாரக் குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஜார்ஜியாவில் தபால்வாக்குப்பதிவு செய்வதில், மாநில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே இருதரப்புக்கும் இடையே காணப்படுவதால், மறு வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம் எனக் கூறப்படுகிறது.

இன்றைய நாளின் முடிவிலேயே வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, வெற்றியாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement