செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஆஸ்திரேலியாவில் நாய்களால் வேட்டையாடப்பட்டு அழியும் ’கோலா’ கரடிகள்..!

Oct 19, 2020 07:29:18 PM

ஸ்திரேலியாவின் கலாச்சார அடையாளமாகத் திகழும் கோலாக் கரடிகள் வேகமாக அழிவைச் சந்தித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மட்டும் காணக்கூடிய பாலூட்டி இனம் கோலா கரடி. இது தண்ணீர் குடிக்காது. அது உண்ணும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. ஒரு நாளைக்கு 19 மணி நேரம் தூங்கும் தன்மையுடையவை. ஆஸ்திரேலியாவில் காணப்படும் தனித்துவமான பாலூட்டி இனமான கோலா கரடி தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் மொத்தமே சுமார் 50,000 கோலா கரடிகள் தான் வசிக்கின்றன என்று எச்சரித்துள்ளனர்.

யூகலிப்டஸ் மரங்கள் தான் கோலா கரடிகளின் முக்கிய வாழ்விடம் மற்றும் உணவு. புதிதாக உருவாக்கப்படும் பண்ணைகளால் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் சூறையாடப்படுகின்றன. வறட்சி, புதர் தீ, கால நிலை மாற்றம், வாழ்விடம் அழிதல் போன்ற காரணங்களால் கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாகச் சுருங்கி வருகிறது. இந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புதர் தீயில் சிக்கி 10 சதவிகித கோலா கரடிகள் அழிந்துள்ளன. இதே நிலை நீடித்தால் 2050 - ம் ஆண்டுக்குள் கோலா கரடிகள் ஆஸ்திரேலேவில் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

வனவிலங்கு சேவை தன்னார்வலரான ட்ரேசி, “கோலா கரடிகளின் வாழ்விடங்களில் அதிகமான குடியிருப்புகள் உருவாகின்றன. அங்குள்ள மக்கள் வசிக்கும் நாய்களால் கோலா கரடிகள் வேட்டையாடப்பட்டு அழிகின்றன. இந்த நிலை நீடித்தால் விரைவில் கோலா கரடிகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அழிந்து வரும் கோலா கரடிகளைக் காப்பாற்றி, அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் ப்ளூ மவுண்டெயின்ஸ் கோலா ப்ராஜெக்ட் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement