செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

’எங்கள் தாய் மொழியை ஒருபோதும் இழக்கமாட்டோம்’ - சீன அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக வலுக்கும் மங்கோலியர்கள் போராட்டம்!

Sep 04, 2020 08:54:23 AM

சீனாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மங்கோலிய இன மக்கள் ஒன்று கூடி, ‘மங்கோலிய மொழிதான் எங்கள் தாய் மொழி. எங்கள் தாய்மொழியை ஒருபோதும் இழக்கமாட்டோம்’ என்று முழக்கமிட்டு சீன அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக  போராடி வருகின்றனர்.

சீனாவில் வசிக்கும் மங்கோலிய இன மக்கள் தங்கள் தாய் மொழியையே தனித்துவ அடையாளமாகவும், கலாச்சாரமாகவும் கருதுகின்றனர். அந்தக் கலாச்சாரத்தை நசுக்கி ஒருங்கிணைந்த சீன கலாச்சாரத்தை அவர்கள் மேல் புகுத்தும் நோக்கில், சமீபத்தில் சீன அரசு புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது.



அதன் அடிப்படையில், சீன மொழிக்கு ஆதரவாக மற்ற மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறைக்கப்பட்டது. மேலும், மற்ற மொழிகளில் கற்றுக்கொடுக்கும் பாடங்களையும் சீன மொழிக்கு மாற்றப்பட்டன. இந்த அறிவிப்பைக் கேட்டு வெகுண்டெழுந்த சீன நாட்டில் வசிக்கும் மங்கோலிய இன மக்கள் பள்ளி மற்றும் வீடுகளுக்கு முன்பு திரண்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.



சீன அரசின் அடக்குமுறை குறித்து  மங்கோலிய மக்கள் கூறுகையில், “மங்கோலியர்களான எங்களுக்குத் தனித்துவ கலாச்சாரம், அடையாளங்கள் இருக்கின்றன. நாங்கள் சீன மொழியில் கற்பிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டால் மங்கோலியன் மொழி உண்மையிலேயே அழிந்துவிடும்.  தொலைக்காட்சியில் கூட சீன மொழியில் தான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கார்டூன் கூட சீன மொழியிலேயே ஓடுகின்றன. சீன மொழியை எங்கள் மீது திணிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்கின்றனர். 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement