செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

‘மனித மூளையில் கம்யூட்டர் சிப் பொருத்தும் ஆய்வு - பன்றி மூளையில் பொருத்தி பார்த்த சோதனை வெற்றி...

Aug 29, 2020 03:48:39 PM

மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்ட பன்றியை அறிமுகப்படுத்தியுள்ளது, எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம். மனிதனின் மூளையில் சிப் வைக்கும் புரட்சிகரமான செயல்பாட்டுக்கு முன்னோட்டமாகவே இந்த செயல்முறை பார்க்கப்படுகிறது.

தொழிலதிபர் எலோன் மஸ்க்கால், 2016 - ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவை மையமாகக்கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் நியூராலிங்க் . மனிதனின் மூளையை நேரடியாக இயந்திரங்களோடு இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. இந்த ஆய்வுக்காக 11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் மனிதனின் மூளையில் பொருத்தப்படும் கணினி சிப்கள் மூலம், இயந்திரங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியும். இத்துடன் இல்லாமல், உடலில் ஏற்படும் நரம்பியல் தொடர்பான நோய்கள், முதுகுத்தண்டுவட பிரச்னைகளைக் குணப்படுத்திவிட முடியும் என்று நம்பப்படுகிறது.



இந்த ஆய்வின் முன்னோட்டமாக, பன்றி ஒன்றின் மூளையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எட்டு மி.மீ அளவுள்ள கம்யூட்டர் சிப் ஒன்றைப் பொருத்தி நியூராலிங் ஆய்வு செய்தது. கம்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றி இரண்டு மாதங்களாக எந்தவித உடல் உபாதைகளும் இல்லாமல் நலமாக இருக்கிறது. மேலும், பன்றியின் அன்றாட நடவடிக்கையின் போது உருவாகும் சிக்னல்கள் கம்யூட்டர் மூலம் பெற்று ஆய்வு செய்தது நியூராலிங்க். தற்போது இந்தப் பன்றியையும், சிப் மூலம் பெறப்பட்ட சிக்னல்களையும் வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.

“பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு, உரிய ஒப்புதல் பெற்று, அதிநவீன ரோபோக்கள் உதவியுடன், மனிதத் தலைமுடியை விடவும் சிறிய நெகிழ்வான கம்யூட்டர் சிப்கள் மனிதனின் இயக்கம் மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொருத்திப் பரிசோதனை நடத்தப்படும்” என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

மூளையில் சிப் பொருத்தும்  இந்தப் பரிசோதனையானது விலங்குகளுடன் ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தச் செயல்முறை மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் மனித குல வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement