ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக PSG அணி முன்னேறியுள்ளதை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
முன்னதாக போர்சுகலில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் PSG அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் Leipzig அணியை வீழ்த்தியது.
இதையடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பொதுவெளியில் திரண்ட PSG ரசிகர்கள் தீப்பந்தங்கள் ஏந்தியும், வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் உற்சாகமாக கொண்டாடினர்.