செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

'எல்லா ஏஞ்சல்களுக்கும் இறக்கைகள் இருப்பதில்லை!' வைரலாக பரவும் லெபனான் நர்ஸின் புகைப்படம்

Aug 06, 2020 11:07:40 AM

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெடி விபத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் சிக்கி 4,000 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த பெய்ரூட் துறைமுகத்தின் அருகிலுள்ள அஷ்ரஃபியா என்ற இடத்தில் இருந்த ஆரோம் மருத்துவமனையும் பலத்த சேதமடைந்தது.

மருத்துவமனையில் பணியாற்றிய 4 நர்ஸ்கள் பலியாகினர். 200 நோயாளிகள் காயமடைந்தனர். வெடி விபத்தின் போது, மருத்துவமனையில் பணி புரிந்த நர்ஸ் ஒருவர் கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு உடைந்து சிதறிய ஜன்னல் அருகே நின்று போனில் பேசுவது போன்ற புகைப்படத்தை பிலால் மெரி ஜெவீஸ் என்ற போட்டோகிராபர் எடுத்தார்.

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்ட பிலால் மெரி ஜெவீஸ், ''தன் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தை பார்த்ததில்லை. இந்த நர்ஸ் தன் கையில் மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு யாருடனோ போனில் பேச முயற்சித்தார். என் 16 வருட கால புகைப்பட அனுபவத்தில் போர்க்களத்தில் கூட இது போன்ற காட்சியைக் காணவில்லை'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் குழந்தைகளைக் காப்பாற்றிய நர்ஸின் புகைப்படம் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. உலக மக்கள் அந்த நர்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 'எல்லா ஏஞ்சல்களுக்கும் இறக்கைகள் இருப்பதில்லை என்றும் இந்த இக்கட்டான தருணத்திலும் இந்த நர்ஸால் எப்படி இவ்வளவு திறமையுடன் செயல்பட முடிந்தது எனவும் மக்கள் கொரோனா என்ற கொடியவனிடம் சிக்கித் தவிக்கும் இந்த ஆண்டில் சுகாதாரப் பணியாளர்கள்தான் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்’ என்றும் பாராட்டு குவிந்து வருகிறது.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement