செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கொரோனா பாதிப்பு ; ஒரு கோடியைக் கடந்தது

Jun 28, 2020 02:40:31 PM

உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தையும் கடந்துள்ளது. 

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 6 மாதங்களில் உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. அதிவிரைவாகப் பரவி வரும் இந்த வைரஸ் தொற்றினால் தற்போது உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 54 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பினாலும் மேலும் 57 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் தொற்றின் மையமாகிப் போன அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக தொற்றின் வேகம் குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் உச்ச நிலையை அடைந்தது. நேற்று ஒரே நாளில் 47 ஆயிரம் பேர் புதிதாக பெருந்தொற்றுக்கு உள்ளானதால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதேபோல் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு தளர்த்தப்பட்டிருந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்கள் மீண்டும் அமல்படுத்துகின்றன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான டெக்ஸாஸில் அனைத்து மதுபான விடுதிகளையும் மூட ஆளுநர் கிரெக் அப்பாட் உத்தரவிட்டுள்ளார். ஃபுளோரிடா மகாணத்திலும் உணவு மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் பிரேசில் நாட்டிலும் கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உண்டானதால் இதுவரை 12 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததால் மெக்ஸிகோ 25 ஆயிரம் பேரைப் பலிகொடுத்து அடுத்த இடத்தில் தொடர்கிறது.

ஆனால் அதற்கு முன்பாகவே இங்கிலாந்தில் 43 ஆயிரம் பேரையும், இத்தாலியில் 35 ஆயிரம் மக்களையும், பிரான்சில் 30 ஆயிரம் பேரையும்,ஸ்பெயினில் 28 ஆயிரம் மனிதர்களையும் கொரோனா காவு வாங்கியுள்ளது. இதேபோல் ஈரான், ஜெர்மனி, பெரு ஆகிய நாடுகளில் பல ஆயிரம் பேர் வைரஸ் தொற்றினால் மாண்டு போயுள்ளனர்.

அதேபோல் 500 பேர் முதல் ஆயிரம் பேர் உயிர்பலி கொடுத்த நாடுகளின் பட்டியல் ஏராளமாக உள்ளன. கொல்லுயிரியால் பாதிப்புக்கு ஆளாபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தடுப்பு மருந்துகளை உடனே கண்டுபிடிக்க உலக நாடுகளை அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

class="twitter-tweet">

Global coronavirus cases approach 10 million https://t.co/dC4KYRqiBA pic.twitter.com/UT5eeDjjW7

— Reuters (@Reuters) June 28, 2020


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement