செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

70 ஆண்டுகளுக்குப் பிறகு எளிமையாகக் கொண்டாடப்பட்ட எலிசபெத் மகாராணியின் பிறந்தநாள் விழா!

Jun 13, 2020 04:55:44 PM

இங்கிலாந்து அரச குடும்பத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா, மகாராணியின் பிறந்தநாள் விழா.  ஒவ்வொரு வருடமும்  பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் சூழ ஆடம்பரமான முறையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பில் நடைபெறும் பிறந்த நாள் விழா, இந்த வருடத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணத்தால்  எளிமையான முறையில் சம்பிரதாயத்துக்காக இன்று நடந்து முடிந்திருக்கிறது.



இதற்கு முன்பு 1955 - ல் நடந்த ரயில்வே போராட்டத்தின் போதுதான் இப்படி எளிமையாகக் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இன்றைய பிறந்த நாள் விழாவில் துருப்புகளின் வண்ண அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஒரு சில சிப்பாய்கள் மட்டும் சம்பிரதாயத்துக்கு இசை இசைத்து ராணிக்கு மரியாதை செலுத்தினர். அவர்களின் மரியாதையை எலிசபெத் மகாராணி ஏற்றுக்கொண்டார். இத்துடன் பிறந்த நாள் விழா முடிந்துவிட்டது.



இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 94 - வது பிறந்த நாளை ஏப்ரல் 21- ம் தேடிக் கொண்டாடினார். ஆனால், ராஜாங்க ரீதியில் அவரது பிறந்த நாள் எப்போது ஜூன் மாதத்தில் தான் 'வண்ண அணிவகுப்புடன்' கொண்டாடப்படும். இங்கிலாந்து ராணுவப் பிரிவுகளின் கொடிகளைக் குறிப்பதைப் போன்று இந்த வண்ண அணிவகுப்புகள் அரங்கேறும். பொதுவாக பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான வீரர்களும் புரவி வீரர்களும் அணிவகுத்து அரச குடும்பத்துக்கு மரியாதை செய்வார்கள். அப்போது விமானங்கள் அரண்மனைக்கு மேலே பறந்து மரியாதை செலுத்தும்.

இவை எதுவுமே இந்த வருடத்தில் நடைபெறாமல் எளிமையான முறையில் ராணியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது!


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement