செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

'மீண்டுவரும் ஐரோப்பா... மோசமான பாதிப்பில் தெற்காசியா' - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Jun 09, 2020 12:42:53 PM

'உலகளவில்  கொரோனா வைரஸ் பரவல் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் போராட்டம் சூழலை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது' என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

சீனாவிலிருந்து பரவிய நாவல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரை இறப்பைத் தழுவியிருக்கிறார்கள். ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய பொருளாதார பிரச்னையும் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. உலகளவில் நிலைமை மேலும் சிக்கலாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஜெனிவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் திங்கள் கிழமையன்று காணொளி காட்சி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...

"கிழக்கு ஆசியாவுக்குப் பிறகு ஐரோப்பா கொரோனோ தொற்றின் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், தற்போது அமெரிக்கா இவற்றை மிஞ்சிவிட்டது. கொரோனோ வைரஸ் தாக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஐரோப்பா தற்போது மீண்டு வருகிறது. ஆனால், உலகளவில் நிலைமை மேலும் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

கடந்த பத்து நாள்களில் மட்டும் ஒன்பது தினங்கள் தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.  இதில் 7 - ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் 1,36,000 பேருக்கு வைரஸ் தொற்று பதிவானது. ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். இவற்றில் 75 சதவீத பாதிப்புகள் அமெரிக்கா  மற்றும் தெற்காசிய நாடுகளில் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. உலகளவில் நோய்த் தொற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சூழலே நிலவுகிறது. ஆறு மாதங்களாகப் பரவி வரும் நோய்த் தொற்றை இனியும் எந்த நாடும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது" என்றும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

இனவெறிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்துப் பேசுகையில், "இந்த மோசமான சூழலில், மே 25 - ம் தேதி ஜார்ஜ் ப்ளாய்ட் அமெரிக்காவில் கொல்லப்பட்டபிறகு உலகளவில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் திறலாகப் பங்கு கொள்வோர் நோய்த் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும். உலக சுகாதார அமைப்பானது சமத்துவத்தையும், இனவெறிக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தையும் ஆதரிக்கிறது. அனைத்து விதமான பாகுபாடுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இனவெறிக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் போராட ஊக்குவிக்கிறோம். போராட்டத்தில் பங்கு கொள்ளும்போது முடிந்த வரை ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று போராடுங்கள். கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியத் தவறாதீர்கள்" என்றும் அறிவுறுத்தினார்.

டெட்ராஸ் மேலும் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான PPE உபகரணங்களை 110 நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. 126 நாடுகளுக்கு 129 மில்லியனுக்கும் அதிகமான PPE உபகரணங்களை அனுப்ப இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்றார்.  


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement