செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பெருந்தொற்றால் பேரழிவு... அச்சத்தில் அமெரிக்கர்கள்

Apr 20, 2020 12:14:54 PM

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.

உலகின் ஒருகோடியில் உள்ள சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று நோய் மறுகோடியில் உள்ள அமெரிக்காவில் மரணதாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் நோயின் மையப் புள்ளியான அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பலியானதால், இதுவரை அங்கு 40 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 500ஐத் தாண்டியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நபர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் நியூயார்க் நகர காவல்துறையில் 4 ஆயிரத்து 371 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 73 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அங்கு பொதுமக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக நோய்த் தொற்று சோதனை செய்யும் திட்டம் இருப்பதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் அமெரிக்கப் பொருளாதாரம் சில மாதங்களில் சரி செய்யப்படும் என நிதித்துறைச் செயலாளர் ஸ்டீவன் நூசின் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கும், சிறு தொழில்களுக்கும் டிரம்ப் போதிய அளவு நிதி ஒதுக்கவில்லை என ரோட் தீவுகள் பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுகாதாரத்துறையால் வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனைக் கருவிகள் மாசுபாடுடன் இருந்ததால் சுமார் 12 ஆயிரம் கருவிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement