கொரோனா தொற்று காரணமாக தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ரோபோக்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.
அந்நாட்டின் 2வது பெரிய நகரமான மெடலினில் இந்த ரோபோக்கள் உபயோகிக்கப்படுகின்றன. உணவகங்களில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை ஆரஞ்சு கொடி கட்டப்பட்ட இந்த ரோபோக்கள் எடுத்துச் செல்கின்றன.இதற்கான பணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனையில் கட்டியதும் உணவு விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை டெலிவரிக்குப் பின்னரும் ரோபோக்கள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 120 முறை உணவு விநியோகிக்கப்படுவதாக ரோபோக்களின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.