செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியது..!

Apr 17, 2020 07:23:46 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டிவிட்டது. வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்து 82 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் விவரமும், உயிரிழப்பு தகவல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 500 ஐ கடந்து விட்டது. அங்கு, 29 ஆயிரத்து 500 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இத்தாலியில் 525 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்து, பட்டியலில் 2- வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயினில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், பலி ஆனோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்து விட்டது.

பிரான்சில் 17 ஆயிரம் பேர், உயிரிழந்து உள்ளனர். இங்கிலாந்தில் ஒரே நாளில் 861 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

ஈரான் மற்றும் பெல்ஜியத்தில் உயிரிழப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஜெர்மனியில் உயிரிழப்பு 4 ஆயிரத்தைக் கடந்து விட்ட நிலையில் நெதர்லாந்தில், உயிரிழப்பு 3 ஆயிரத்து 300ஐத் தாண்டி விட்டது.

சீனாவை பொறுத்த வரை, உயிரிழப்பு 3 ஆயிரத்து 342 என்ற நிலையில் உள்ளது.

பிரேசிலில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்க, கனடாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 200ஐ நெருங்கி விட்டது.

ஸ்வீடனில் ஆயிரத்து 133 பேரும் சுவிட்சர்லாந்தில் ஆயிரத்து 281 பேரும், கொரோனாவால் உயிரிழந்தனர்.

உலகம் முழவதும் ஒரே நாளில் 94 ஆயிரத்து 800 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம், ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 500 நெருங்கி வருகிறது.

இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரம் பேர், குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் இருப்போர் மட்டும் 57 ஆயிரம் பேர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் நிமிடத்திற்கு நிமிடம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்றொரு பக்கம், நொடிக்கு நொடி, உயிரிழப்பு உயர்ந்து வருவதால், மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

 


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement