உலகம் அளவில் கொரோனா வைரசால் சுமார் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 52 நாடுகளில் 22 ஆயிரத்து 73 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தோ, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தோ அல்லது சமூகத்தில் இருந்தோ நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார ஊழியர்களுக்கு தூய்மையான பணியிடங்களை வழங்கி, அவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.