பலூனில் கட்டப்பட்ட நாய் ஒன்று பறந்து அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் வீடியோ இணையத்தில் 2 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
ஹீலியம் வாயு நிரப்பட்டு பறக்கும் விலங்குகளை இதுவரை கார்ட்டூன் படத்தில் மட்டுமே பார்த்த மக்கள் நிஜமாகவே நாய் பறப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
பீட்டர் மா பூடில் என்ற பெயரில் சமீபத்தில் டிக் டாக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் நாய் ஒன்று உடலில் பலூனைக் கட்டிக் கொண்டு நிற்கிறது.
தொடர்ந்து நாயைப் பிடித்திருக்கும் பெண் அதனை விட்டதும், வாயு நிரப்பப்பட்ட பலூனால் நாய் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இந்த வீடியோ எங்கு, எப்போது படமாக்கப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை