செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் கொரானாவுக்கு பலி

Mar 09, 2020 09:02:18 AM

சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இத்தாலியில் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அந்நாட்டின் ஒன்றரைக் கோடி மக்கள் வேறு இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 3 ஆயிரத்து 827 பேரின் உயிரைக் குடித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் உயிரிழப்பு குறைந்து வருகிறது. ஆனால், உலகின் 105 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்துக் கொத்தான மரணங்களால் நிலைகுலைந்து போன அந்நாட்டு அரசு நாடு முழுவதும் உள்ள இரவு விடுதிகள், திரையரங்கங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தாலியின் பிறபகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வடபகுதியில் உள்ள லோம்பார்டி பிராந்தியம் மற்றும் அருகாமையில் உள்ள 15 மாகாணங்களை சேர்ந்த சுமார் ஒரு கோடியே 60 லட்சம் மக்கள் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதிவரை தங்களது வசிப்பிடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல கூடாது என இத்தாலி பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். வேறு நாடுகளுக்குச் சென்று வரும் விமானங்கள் இயக்கப்படாததால் விமான நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. 

அலுவலர்களும், பயணிகளும் வராத காரணத்தினால் அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் ஆள் அரவமின்றி காணப்படுகின்றன. ((7015)) இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிறைக் கைதிகளை அவர்களின் உறவினர் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்து. இந்தத் தடையை நீக்கக் கோரி மோடனா நகரில் உள்ள சிறையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்விடத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சிறையின் வெளியே கைதிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement