செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆஸ்திரேலியா - அதீத பருவநிலை ஏற்ற இறக்கம்

Feb 13, 2020 07:07:24 PM

ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பருவநிலை நெருக்கடியை பொருட்படுத்தாதன் விளைவுதான் தற்போதைய இயற்கை பேரழிவுக்கு காரணம் என்றும் இது உலக நாடுகளுக்கான எச்சரிக்கை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

தீவு கண்டமான ஆஸ்திரேலியாவில் 1910 ஆம் ஆண்டில் இருந்தே படிபடியாக உயர்ந்து வரும் வெப்பநிலை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தைத் தொட்டது மட்டுமின்றி வரலாறு காணாத வறட்சிக்கும் பல்வேறு இடங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீக்கும் வித்திட்டது.

இதன் விளைவால் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்கள் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸில் 2017 ஆம் ஆண்டில் இருந்து வெறும் 12 சென்டி மீட்டர் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இவை ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக கிழக்கு கடற்கரையோரம் வெளுத்து வாங்கும் கனமழை, வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. வடமேற்கில் அதிகபட்ச குளிர் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும் காற்று மாசு, மக்களை மூச்சு திணற வைத்துள்ளது.

மனிதனால் தூண்டப்பட்ட இந்த அதீத பருவநிலை ஏற்ற இறக்கத்தால் முதல் நாள் 40 டிகிரி செல்சியசுக்கு வெயில் கொளுத்தி விட்டு அடுத்த நாளே ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்க்கும் விசித்திரத்தை ஆஸ்திரேலியா கண்டு வருகிறது. இயற்கையின் இந்த விளையாட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி வனங்களும் விலங்குகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அதிக அளவு குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருள் ஆற்றல் மூலங்களிலிருந்து விலகிச் செல்வதன் மூலமே இயற்கையின் இந்த மோசமான விளைவுகளை தடுக்கமுடியும் என்று கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நன்மையோ தீமையோ நாம் என்ன கொடுக்கிறோமோ அதைதான் இயற்கை நமக்கு திருப்பி அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement