செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கொரானா தொற்று நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது - உலக சுகாதார நிறுவனம்

Feb 12, 2020 04:58:37 PM

கொரானா தொற்றால்  சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113ஆக உயர்ந்துள்ள நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு எடுத்துள்ளது. ஆனால் நிலைமை கவலைக்கிடமாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்திருக்கிறது.

இன்று காலை ஹூபேய் மாகாணத்தில் ஆயிரத்து 638 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இது குறைவு என்பதால், கொரானா வைரசின் பரவல் குறைந்து வருவதன் அறிகுறியாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே சமயம் ஊகான் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அறிகுறிகளுடன் வரும் பலர் மருத்துவர்களை காண முடியாமல் திரும்பவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே கொரானா தொற்றை தடுக்கும் நோக்கில் சீனாவில் இன்டர் சிட்டி மற்றும் நாடு முழுவதும் ஓடும் அதிவேக ரயில்களில் நின்று கொண்டு பயணம் செய்வதற்கும், உணவு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான சீனர்கள் தங்களது விழாக்கால பயணங்களை பாதியில் நிறுத்தி விட்டு சொந்த ஊர்களுக்கு முன்னதாகவே திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கொரானா தொற்றால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்சில் தலா ஒருவர் என உலக அளவில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் 44 ஆயிரத்து 653 பேருக்கும், 27 வெளிநாடுகளில் 518 பேருக்கும் என மொத்தம் 45 ஆயிரத்து 171 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தொற்று நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனமும் கவலை தெரிவித்துள்ளது.

இதனிடையே வேகமாகப் பரவி வரும் இந்த கொரானா தாக்குதலுக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO)  கோவிட்-19 (Covid-19,) என்று நேற்று பெயரிட்டது. ஜெனீவாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், 2019 ல் பரவிய கொரானாவைரஸ் நோய் என்பதை குறிக்கும் வகையில் இந்தப் பெயர் இடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் நோய் தொற்றின் தீவிரத்தை குறைக்கும் நடவடிக்கையாக, ஊகான் நகர் மற்றும் ஹுபேய் (Hubei) மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement