ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண் அதிகாரி கீத் க்ரெஸ்மேன்(Keith Cressman), உள்நாட்டு போரால் ஏற்கனவே உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூடான் நோக்கி வெட்டுக்கிளி படை நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
மழைக்கு பிறகு இந்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கக்கூடும் என்பதால் துரிதகதியில் நடவடிக்கை தேவை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.