நித்தியானந்தா ஆன்மிகச் சுற்றுலாவில் இருப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை புகாரில் அவரது ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நித்தியானந்தாவை ஆஜராகக்கோரும் சம்மனை நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நித்தியானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் துணை கண்காணிப்பாளர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், நித்தியானந்தா ஆஜராகக் கோரி அனுப்பப்பட்ட சம்மன் அவரது உதவியாளரிடம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லை எனவும், அவர் ஆன்மிகச் சுற்றுலா சென்றிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.