செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குழிக்குள் சிறுமி.. மீட்ட இளைஞர்கள்..! தங்கள் கையே உதவி..!

Jan 17, 2020 12:12:11 PM

புதுச்சேரி விழுப்புரம் எல்லையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியில் வீடு கட்ட தோண்டப்பட்ட அஸ்திவார குழிக்குள் விழுந்த 3 வயது சிறுமியை இளைஞர்கள் பக்கத்தில் குழி தோண்டி பத்திரமாக மீட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

புதுச்சேரி - விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்பவரின் நிலத்தில் அரசின் வீடு கட்டும் திட்ட பணிக்கு 7 அடி ஆழத்தில் போர்வெல் எந்திரத்தை கொண்டு ஒரு அடி சுற்றளவில் அஸ்திவார குழி அமைத்துள்ளனர். குழிக்குள் கான்கிரீட் கம்பிகளை அமைத்து தூண் கட்டுவதற்கு காலதாமதமானதால் அந்த குழிகள் அப்படியே இருந்துள்ளது.

அந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சரோஜாவின் மகளான 3 வயது சிறுமி ஒரு குழிக்குள் தவறி விழுந்துவிட்டாள். அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். குழியின் மேல் புறமாக கையை விட்டு வெளியே தூக்கி விடலாம் என்றால் 2 1/2 அடி உயரம் உள்ள சிறுமியின் கை குழிக்குள் சிக்கிக் கொண்டதால் சிறுமியை மேலே தூக்க இயலவில்லை.

தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு காத்திருக்காமல் அந்தபகுதி இளைஞர்கள் சிலர் தாங்களே மீட்பு பணியில் இறங்கினர்.

அந்த குழிக்கு பக்க வாட்டில் பொக்லைன் மூலம் ஒரு குழி ஒன்று தோண்டி விரைவாக அந்த அஸ்திவார குழிக்குள் தவித்த சிறுமியை 15 நிமிடங்களில் பத்திரமாக மீட்டுள்ளனர்

சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோவில் இளைஞர்களின் வேகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. அதே நேரத்தில் அந்த குழிக்குள் சிக்கிய சிறுமியை வேடிக்கை பார்க்கும் ஆவலில் திரண்ட கூட்டத்தின் அழுத்தத்தால் குழிக்குள் மண் சரிவு ஏற்பட்டிருந்தால் விபரீதம் நிகழ்ந்திருக்கும் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

இது போன்ற தருணத்தில் பொதுமக்கள் குழிக்கு அருகில் பெரும் அளவில் கூடி இருந்து மண் சரிவை ஏற்படுத்தாமல் இருந்தாலே விரைவாக குழிக்குள் விழுந்தவர்கள் உயிருடன் மீட்க இயலும் என்று சுட்டிக்காட்டும் தீயணைப்பு வீரர்கள். இது அஸ்திவார குழி என்பதாலும் ஆழம் குறைவு என்பதாலும் இளைஞர்களின் வேகம் கை கொடுத்துள்ளது என்றும் போர்வெல் போன்ற ஆழமான குழிக்குள் இது போன்று யாரேனும் தவறி விழுந்தால் கூட்டத்தை அகற்றி விட்டு தக்க பாதுகாப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

திருச்சி அருகே போர்வெல் குழிக்குள் சிறுவன் சுஜீத் தவறி விழுந்து பலியான விவகாரத்தில் ஆரம்பத்தில் குழியைசுற்றி நின்றவர்களின் அழுத்தம் தாங்காமல் குழிக்குள் மண்சரிவு ஏற்பட்டதால் தான் மீட்பு பணியில் பெரும் பின்னடைவை உண்டாக்கியது.

விவரம் தெரிந்து கொள்வது அவசியம் தான் அதற்காக வேடிக்கையே விபரீதம் ஆகி விடக்கூடாது என்பதை கூட்டத்தில் முண்டியடிப்பவர்கள் இனியாவது உணர வேண்டும்..!


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement