செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு விரைவில் வாபஸ்...!

Jan 13, 2020 09:23:17 AM

முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள முக்கிய பிரமுகர்களுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் முறியடிப்பு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணியை கவனிப்பதால் என்.எஸ்.ஜி-யை உருவாக்கிய நோக்கமே முழுமையாக நிறைவேறுவதில்லை என மூத்த அரசு அதிகாரி கூறியுள்ளார்.

எனவே இனி என்.எஸ்.ஜி கமாண்டோ படையினர் இனி பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் முறியடிப்பு பணிகளை மட்டுமே கவனிப்பார்கள்.அதற்கேற்றவாறு முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணிகளில் இருந்து விரைவில் என்.எஸ்.ஜி கமாண்டோ படை விலக்கி கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள ராஜ்நாத்சிங், அத்வானி, சந்திரபாபு, பாதல் உள்ளிட்ட 13 பேருக்கு இனி சி.ஆர்.பி.எஃப்., சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

450 கமாண்டோக்கள் விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்படுவதன் மூலம், என்எஸ்ஜியின் திறனுக்கு மேலும் வலுசேர்க்கும். ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்தால் அதனை சமாளிக்க போதுமான கமாண்டோ வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்தே மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement