செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

எல்லை தாண்டியும் தீவிரவாதிகளை அழிப்போம் - புதிய ராணுவ தளபதி எச்சரிக்கை

Jan 04, 2020 05:08:41 PM

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் ஒரு வலுவான எச்சரிக்கையை விடுத்தது என்று ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய வீரர்கள் துல்லியத் தாக்குதல் மூலம் அழித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தளபதி நரவானே, எல்லையைத் தாண்டி வந்தும் இந்தியா தீவிரவாதிகளை அழிக்க முடியும் என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருப்பதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பாகிஸ்தான் நிறைய சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த தாக்குதல்கள் ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்த தாக்குதல்களின் போது அணு ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமே எழவில்லை என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார்.

தீவிரவாதம் எங்கே உருவாகிறதோ அங்கே முன் கூட்டியே தாக்குதல் நடத்த இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல சீன எல்லையில் மேலும் பாதுகாப்பு வலுவாக்கப்படும். எந்த வித அச்சறுத்தல்களையும் சமாளிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளதாக தெரிவித்தார்.


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement